connect

Friday, November 22, 2019

திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்க்கு உட்பட்டது குறிப்பன்குளம் என்ற கிராமம் இங்கு இந்த கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் PACL நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது இந்நிறுவனம் SEBI அமைப்பால் முடக்கபட்ட பின்னர் அதன் நிர்வாக கட்டமைப்பு உடைக்கபட்டதால் இந் நிறுவனத்தின் நிலங்கள் அனைத்துமே முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யபட்டு துண்டு துண்டுகளாக சிதறடிக்கப்பட்ட நிலையில் உள்ளது திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்.

PACL INDIA LTD | PACL REFUND NEWS | PACL TODAY NEWS TAMIL | PACL TAMIL NADU NEWS |



 LIKE |  COMMENT |  SHARE |  SUBSCRIBE 

Monday, November 11, 2019

குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு

குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள KURIPPANKULAM PACL FAME சட்டவிரோத கும்பல்களால் முழுக்கவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சின்னாபின்னமாக சிதறிப்போய் உள்ளது எது கம்பெனி நிலம் என்று கண்டுபிடிக்க இருந்த கடைசி அடையாளமான கம்பெனி கடைசி போர்டு தற்போது சமூகவிரோத கும்பலால் இரவோடு இரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது.


அது சம்பந்தமாக வாட்ச்மேன் மனைவியின் ஆவேசமாக அறிவாளோடு பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Sunday, November 10, 2019

PACL AGNALETMENT படிவம் வெளியீடு


PACL AGNALETMENT படிவம் வெளியீடு

PACL Agnaletment வைத்துள்ள தமிழ்நாட்டு PACL முதலீட்டாளர்களின் டேட்டாவை சேகரிக்க ஒருங்கிணைந்த PACL போராட்டுகுழு ஜன்லோக்பிரதிஸ்டான் என்ற அமைப்புடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தாக்கல்செய்ய முன்முயற்சி எடுத்து செயல்படுகிறது.


அதற்கான படிவம் வெளியிட்டுள்ளது
இதனை நிரப்பி அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாளர்களிடமோ அல்லது அந்த படிவத்தில் உள்ள முகவரிக்கோ அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Wednesday, October 30, 2019

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் பயங்கர தீ விபத்து


 கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இதில் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Wednesday, October 16, 2019

PACL சொத்துகளை பாதுகாக்க களம் இறங்கிய முதலீட்டாளர்கள் வழிகாட்டும் திருநெல்வேலி

நிலத்தை மீட்க களத்தில் இறங்கிய PACL முதலீட்டாளர்கள்



pacltodaynews

முறைகேடாக விற்பனை செய்யப்படும் PACL INDIA LTD COMPANY சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் தாலுகாவிற்க்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள 141 ஏக்கர் நிலம் முறைகேடாக உச்சநீதிமன்ற உத்தரவிற்க்கு விரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது 



இதனை கேள்விப்பட்ட முதலீட்டாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்த சொத்தை அடையாளம் காட்டும் விதமாகவும் நில அபகரிப்பு செய்யும் கூட்டத்தினருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகவும் தமிழ் & ஆங்கிலத்தில் உத்தரவுகள் அடங்கிய போர்ட் ஒன்றை அந்த பண்ணை உட்புறம் நட்டு உள்ளனர்

இது போன்று அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு உறுதிபூண்டுள்ளனர் இதுபோல் அனைத்து சொத்துக்களையும் அந்த அந்த பகுதி மக்கள் பாதிகாக்கலாமே !!

Tuesday, October 15, 2019

கோவை பழனி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கம்

  1. கோவை பழனி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கம்


சேலம்-கரூர்
கோவை-பழனி
கோவை-பொள்ளாச்சி,
இடையே 3 புதிய ரயில்களின்சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் காணோலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதன்படி தமிழகத்தில் சேலம், கோவை, பொள்ளாச்சி நகரங்களில் இதற்கான விழா நடைபெற்றது.
புதிய ரயில்கள் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பயணிகளை மகிழ்சியடைய செய்துள்ளது

பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்

பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்



திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையானுர் கொண்டலூர் திப்பனம்பட்டி சென்னல் தா புதுக்குளம் தெற்குமடத்துக்குளம் இன்னும் சில குளங்கள் கடந்த பல வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது தற்போது குளங்கள் தமிழ்நாடு அரசால் தூர்வாரி நன்கு ஆளப்படுத்தப்பட்டு தண்ணீரை தேக்குவதற்க்கு வசதியாக காத்திருக்கின்றன இந்த வருடமாவது பருவ மழை சரியாக பெய்து குளங்கள் நிரம்புமா ?இப்பகுதி மக்கள் வானத்தைப் பார்த்து காத்திருக்கின்றார்கள்

Monday, October 14, 2019

தூத்துக்குடி - பெங்களூர் விமான சேவை

தூத்துக்குடி - பெங்களூர் இண்டிகோ விமான சேவை : 27 oct ம் தேதி தொடக்கம்.

தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை oct 27ம் தேதி தொடங்குகிறது.
 கடந்த 2018 ம் வருடம் ஜூலை மாதம் spice jet நிறுவனத்தால் Tuticorin to bangalur பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது
தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது.

இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில்,
 "பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து  புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும்.
ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக RS.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என்று தெரிவித்துள்ளது

Saturday, October 5, 2019

திருச்சி மீட்டிங்கில் நடந்தது பற்றிய விளக்கம்

திருச்சி மீட்டிங்கில் நடந்தது பற்றிய விளக்கம்


கடந்த மாதம் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பிஎசிஎல் பிரதிநிதிகள் குழு மும்பையில் உள்ள செபி யின் தலைமை அலுவலகத்தில் கமிட்டி ஐ நேரில் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகள் சந்தேகங்கள் கோரிக்கை மனுக்களை கமிட்டியிடம் நேரில் சமர்ப்பித்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பவந்து உள்ளது.

அதில் கூறியுள்ள கருத்துக்களை அக்டோபர் 2ஆம் தேதி திருச்சியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைவருக்கும் அறிவித்தனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழகத்திலிருந்து சென்ற 11 பேர் கொண்ட குழுவினர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக
பன்னீர்செல்வம், செல்வ முத்துக்குமரன், தினகரன், சுப்ரமணியன், ஆறுமுகச்சாமி, மணிகண்டன் ஆகியோர் பேசினார்கள்

இதில் முக்கியமாக கூறப்பட்ட கருத்து என்னவென்றால் இது வரையும் லோதா கமிட்டி சந்தித்து இவ்வளவு நேரம் யாரிடமும் பேசியது இல்லை முதல் முதலாக தமிழ்நாட்டின் PACL பிரதிநிதிகள் கமிட்டியை சந்தித்து தங்களுடைய பிரச்சனைகளை நேரில் தெரிவித்து கமிட்டிக்கு புரிய வைத்தனர் முக்கியமாக அக்னாலேஜ்மென்ட் பிரச்சனை,  இறந்துபோன வாடிக்கையாளர்களுக்கு வாரிசுகள் பணத்தைப் பெறுவது, அனைத்து ரசீதுகள் கேட்கக்கூடாது, ஆன்லைனில் பதிவு செய்ததில் தவறுதலான பதிவுகளுக்கு தீர்வு போன்ற அனைத்து பிரச்சினைகளும் கமிட்டியினர் முன்வைக்கப்பட்டு அனைத்தையும் கமிட்டி பரிசீலனை செய்வதாக கூறி யுள்ளது. முக்கியமாக தமிழில் கமிட்டி நேரடியாக பொது அறிவிப்பு ஒன்றை பத்திரிக்கை வாயிலாக வெளியிடுவதாக கூறி உள்ளது மேலும் அக்டோபர் 10ம் தேதி ரூபாய் 5 ஆயிரம் வரை கட்டியுள்ள முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதற்கான நடவடிக்கை தொடங்கும் என்ற தகவலையும் கூறியுள்ளது.
 இதுபோன்ற அனைத்து தகவல்களும் திருச்சி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக அனைவரும் உறுதி கூறினார்கள் முடிவில் ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூற கருத்தரங்கு நிறைவு பெற்றது

Monday, September 30, 2019

லோதா கமிட்டி சந்திப்பு பற்றிய கலந்தாய்வு கூட்டம்

pacl tamilnadu
லோதா கமிட்டி சந்திப்பு பற்றிய கலந்தாய்வு கூட்டம்

Tuesday, September 24, 2019

செங்கோட்டையில் பிஏசிஎல் நிலம் விற்பனை அதிர்ச்சியான செய்தி

செங்கோட்டையில் பிஏசிஎல் நிலம் விற்பனை அதிர்ச்சியான செய்தி


டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிஏசிஎல் இந்தியா லிமிடெட் இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது.


தற்போது அந்த நிறுவனம் செபி என்ற அமைப்பால் முடக்கப்பட்டுள்ளது, 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றத்தால் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க சொத்துக்களை விற்பனை செய்ய அந்த குழு களத்தில் இறங்கியுள்ளது.


ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் நடக்கவில்லை இது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளது இந்த நிறுவனத்தில் முன்னர் வேலை செய்த பணியாளர்கள்&லோக்கல் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இணைந்து கூட்டணியாக இந்த நிலங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக தற்போது திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிறுவனத்திற்கு 0.43 ஏக்கர் நிலம் இருந்தது, இது இந்த பகுதியில் யாருக்குமே தெரியாது நில மோசடி கும்பல் எப்படியோ இதை மோப்பம் பிடித்து விட்டது தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த செங்கோட்டை இடமும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள திருவம்பலபுரம் என்ற இடத்தில் உள்ள பிஏசிஎல் இடமும் இணைந்து ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது இது பற்றிய ஒரு காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Monday, September 23, 2019

உடல் முழுவதும் வெடிகுண்டுகள் பெட்ரோல் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

நெய்வேலியில் மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி,  கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனுமும்,  உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போன வாலிபரை உயிரை பணயம் வைத்து மீட்ட முதன்மை காவலர்.

கடலூர்;
நெய்வேலி நகரத்தில்  வடட்ம் 25 உள்ள தனது  மாமியார் வீட்டின் முன்பு மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன்,  தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.  இதனை பார்த்த மணிகண்டனின் மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டு உள்ளார். அப்போது  அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் கூச்சலிட்ட பெண்ணிடம் விசாரித்து, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வீட்டினுள் சக்தி வாய்ந்த வெடிகுண்டையை, தனது கழுத்தில் சுற்றி கொண்டு, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்துள்ளார் . முதன்மை காவலர் பாலச்சந்திரன் உயிரை பணயம் வைத்து, சூசமாக பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் பல மணி நேரமாக தடுத்து கொண்டிருந்தார். ஆனால் மணிக்கண்டன் விடாப்பிடியாக தற்கொலை செய்து கொள்ள போவதாக, கூறிக் கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பயத்தில் யாரும் செல்லவில்லை. தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு கூறி கொண்டு இருந்தார்.  இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த  காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகரத்திற்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதன பேசி மணிகண்டனை மீட்க முயன்றனர். இறுதியில் மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையை தூக்கி கொண்டு, முதன்மை காவலர் பாலச்சந்திரன் மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று துணிச்சலாக மணிக்கண்டனிடம் சென்றதும், அழுதப்படியே தற்கொலை முயற்சியை கைவிட்டு, குழந்தையை தூக்கியதும், அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் மணிக்கண்டன் தான் விஷம் அருந்தியதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

உயிரை பணயம் வைத்து மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.

#வாழ்த்துக்கள்_பாலா

Saturday, September 21, 2019

PACL திருநெல்வேலி மாவட்ட லெட்சுமியூர் பண்ணை முறைகேடாக விற்பனை

பிஏசிஎல் நிலம் முறைகேடாக விற்பனை



டெல்லியை தலைமையிடமாக கொண்ட பிஏசிஎல் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன இவை அனைத்தும் பொது மக்களிடமிருந்து வசூல் செய்த டெபாசிட் பணத்தில் வாங்கிய இடங்களாகும் 2014 செபி கொடுத்த ஒரு உத்தரவினால் இந்நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து பொது மக்களின் டெபாசிட் பணத்தை திருப்பி அளிப்பதற்காக ஆனால் பொதுமக்களின் பணத்தை திருப்பி அளிக்க எந்த விதமான பெரிய முயற்சியும் எடுக்கப்படவில்லை பிஏசிஎல் நிறுவனமானது தன்னுடைய பேரிலும் தன்னுடைய துணை நிறுவனங்கள் பேரிலும் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்த நிர்வாகிகள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தற்போது நிறுவனம் முடக்கப்பட்டுள்ள காரணத்தால் நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்கள் தங்கள் பெயரில் இருந்த சொத்துக்களை தன்னிச்சையாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இதில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இந்நிறுவனம் பெயரில் உள்ளது அதில் ஒன்றுதான் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள லட்சுமியூர் விவசாய பண்ணை 101 ஏக்கர் நிலம் தற்போது இந்த இடமானது லோக்கல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் சிட்டிசன் ப்ளூ மெட்டல் என்ற கம்பெனிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது இடத்தை வாங்கிய நிறுவனம் தற்போது அந்த இடத்தை சுத்தம் செய்து காம்பவுண்டு அமைத்து வருகிறது பணம் போட்டு முதலீட்டாளர்கள் இதை கண்ணீருடன் பார்த்து வருகிறார்கள்.
அது பற்றிய வீடியோ இணைப்பு இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது

இதனை கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் தமிழக அரசும் உச்சநீதிமன்றமும் நினைத்தால் தற்போது இந்த பணிகளை நிறுத்த முடியும் செய்வார்களா ?? லோதா கமிட்டியின் உச்சநீதிமன்றமும் ??

Tuesday, September 17, 2019

PACL நிறுவன சொத்து முறைகேடாக ஆக்கிரமிப்பு அதிர்ச்சி வீடியோ


PACL நிறுவன சொத்து முறைகேடாக ஆக்கிரமிப்பு அதிர்ச்சி வீடியோ



திருநெல்வேலி ல் PACL நிறுவனத்தின் பிரசிடென்ட் B.K.KALIA பெயரில் உள்ள பங்களாவுடன் இணைந்த 0.17 ஏக்கர் இடத்தை 

PACL INDIA LTD, SEBI இரண்டு அமைப்புகளும் விற்பனைக்கு அனுமதி கொடுத்ததாக போலியாக லெட்டர்பேட் தயாரித்து 


அத்துமீறி உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்து பற்றிய உண்மை நிலை......
இந்த சொத்து உச்சநீதிமன்றத்தால் PACL வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பியளிக்க அமைக்கப்பட்ட லோதா கமிட்டியின்PACL சொத்துக்களின் விற்பனை சம்பந்தப்பட்ட https://www.auctionpacl.com என்ற இணையதளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது

WELCOME TO AUCTION OF PACL PROPERTIES
All the available properties for auction is available on this website. Any one can search and view the document of these properties.
Sebi's Webpage for PACL-FAQs and Public Notices: http://www.sebi.gov.in/PACL.html
இந்த சொத்து ஆக்கிரமிப்பில் உள்ளது அதன் உள்ளே சென்று நமது குழு ஆய்வு செய்த வீடியோ இதில் இணைக்கப்பட்டுள்ளது.
நாம் விசாரணை செய்தவகையில் PACL நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்கள் சிலர் இதில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது இதனை முறைப்படி லோதா கமிட்டியில் புகாரளிக்கப்படும்.
बेईमानी से संपत्ति बेची
PACL INDIA LTD, SEBI ने तिरुनेलवेली में PACL के अध्यक्ष बी.के.काली के साथ संयुक्त उद्यम किया।
  संपत्ति https://www.auctionpacl.com की वेबसाइट पर बिक्री के लिए सूचीबद्ध है, जिसमें लोढ़ा समिति द्वारा PACL परिसंपत्तियों की बिक्री शामिल है, PACL ग्राहकों को वापस करने के लिए सुप्रीम कोर्ट द्वारा स्थापित
 यह संपत्ति कब्जे में है और उस वीडियो में शामिल है जिसकी हमारी टीम ने समीक्षा की है।
 जैसा कि हमने जांच की, यह पता चला कि PACL के कुछ कर्मचारियों को इसके लिए मुआवजा दिया गया है और औपचारिक रूप से लोढ़ा समिति को सूचित किया जाएगा।


PACL TAMILNADU
குழுவின் சமூகவலைத்தள லிங்ஸ்....
📱 YouTube https://youtu.be/dYXlnejFTkI
Watsapp Group
https://chat.whatsapp.com/39YU6D67017...
Teligram Group
https://t.me/joinchat/NV05qRQpiKehLzQ...
பேஸ்புக் பேஜ் பக்கம்
https://www.facebook.com/arumugasamygo/
ஃபேஸ்புக் லிங் குரூப்
https://www.facebook.com/groups/15832...
அனைவரும் இணைந்துகொள்ளவும்

Monday, September 16, 2019

சுரண்டை போலீசாரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குமுறல்

சுரண்டை போலீசாரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குமுறல்


நான் 04-08-19 இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து திருநெல்வேலி மாவட்டம்  பரன்குன்றாபுரத்தில் இருந்து சுரண்டையில் உள்ள அண்ணாசிலை பின்புறம் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்க சென்றேன்.
அங்கு நான் வாங்க சென்ற மருந்து இல்லை அதனால் அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அடுத்த மெடிக்கலுக்கு புறப்பட்டேன். அருகில் தான் செல்கிறோம் என்று தலைகவசம் அணியாமல் வண்டியின் முன்பக்கம் வைத்து சென்றேன்.
செல்லும் வழியில்  காவல்த்துறை துனை ஆய்வாளர் அவர்கள்  வாகன சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.
என்னை நிறுத்தி வாகன சோதனை செய்தார்கள். நானும் எனது வாகன  இன்சூரன்ஸ்,RC  book ,லைசென்சு கொடுத்தேன்.சரிபார்த்து விட்டு தலைகவசம் அணியவில்லை என கூறி அபாதாரம் கேட்டார்கள்.நான் நடந்தை கூறினேன்.
ஏற்கவில்லை. நானும் சரி என்று கூறி அபாதாரம் கொடுக்க முன்வந்தேன்.
அப்பொழுது   காவல் துணை ஆய்வாளர் அவர்களுக்கு தெரிந்த நண்பர்  இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தார்கள் அவர்கள் கையில் தலைகவசம் கூட இல்லை.
அவர் வாகன சோதனை கூட செய்யவில்லை மற்றும் அபாதாரமும் வசூலிக்கவில்லை. அவர்களை அனுப்பி விட்டார் காவல் துறை துணை ஆய்வாளர் அவர்கள்.
நான் சென்று அவர்களை போல் என்னையும் அனுப்புமாறு கேட்டேன். அனுப்பவில்லை.
காவல் துறை துணை ஆய்வாளரிடம் நியாயம் கேட்டேன் கிடைக்கவில்லை.
நியாயம் கேட்ட பலனாக என்னை மற்றும் எனது வண்டியை காவல்நிலையத்திற்கு வலுகட்டாயமாக தூக்கி சென்றார்கள்.
காவல்நிலையத்தில் 5.30pm to 9.30pm வரை வைத்து அவதூறாக பேசி மற்றும் அடித்து
 without helmet RS.100 என அபாதாரம் வசூலித்தனர் மேலும்
ஒரு பெட்டி புகார் வழக்கு பதிவு செய்வோம் என கூறி அனுப்பினர்.
தற்போது .
இன்று 14-09-19 நீதிமன்றம் வர சொல்லி காவல்நிலைய அதிகாரி  தொலைபேசி மற்றும் வீட்டில் வந்து  நேற்று  கூறினார்கள். நீதிமன்றம் சென்றேன் அங்கு காவல்நிலைய அதிகாரி
 IPL 291 section என கூறினார். மேலும் rs.500 அபாதாரம் என் காவல்நிலைய அதிகாரி கூறினார்கள்.
நான் கொடுத்துவிட்டு சென்று நீதிமன்றம் முன் நின்றேன்.
 நீதிபதி ஐயா அழைத்து கேட்டார்கள். தவறு ஒப்பு கொள்கிறாயா?? என கேட்டார்கள்
நான் ஆம் என்று கூறினேன்.
அபாதாரம் rs.200 என கூறினார்கள்.
நான் காவல்நிலைய அதிகாரிடம் சென்று மீதம் rs.300 கேட்டேன்
 அதன் பதில் இந்த பதிவில் உள்ளது.

குறிப்பு
     இறுதி வரை
IPC 291 பிரிவு
பற்றி கூற காவல்நிலைய அதிகாரி மறுத்தார்கள்.
மேலும்
இதன் நகல் தரவில்லை.
நகல் பெற்று கொண்டேன் என கையொப்பம் போட்டால் தான் நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிப்பேன் என கூறினார்கள்.
இந்த பதில் தான் என்னை மீதி பணம் கேட்கும் போது வீடியோ எடுக்க தூண்டியது

Sunday, September 15, 2019

பாவூர்சத்திரத்தில் தெட்சணமாறநாடார் சங்க ஆண்டு மகாசபை கூட்டம.

இன்று 15/9/19 பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற தெட்சணமாறநாடார் சங்கத்தின் ஆண்டு மகாசபை கூட்டம் நடைபெற்றது



தமிழிசையை தெலுங்கானா கவர்னராக்கிய பாரதபிரதமர் மோடிக்கு தெட்சணமாறநாடார் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
இஸ்ரோ தலைவர் சிவன் நாடார் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Friday, September 13, 2019

ராஜபக்‌ஷே மகன் திருமணத்தில் விருந்தினராக கனிமொழி

ராஜபக்‌ஷே மகன் திருமணத்தில் விருந்தினராக கனிமொழி

மீண்டும் மீண்டும் தமிழீழ இனப்படுகொலையில் திமுகவின் பங்கை உறுதிப்படுத்தும் சம்பவங்கள்...  


2009ல் நம் சொந்தங்களான ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை சந்தித்து வணங்கி வாழ்த்து சொல்லி பரிசளித்து விருந்துண்டனர் கனிமொழி திருமாவளவன் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள்...

தற்போது மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் நாமல் ராஜபக்சவின் திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறாள்...
தமிழின கொலைஞன் கருணாநிதியின் மகள் கனிமொழி!
வெட்கமாக இல்லையா இந்த ஜென்மங்களையெல்லாம் தமிழர் என்ற அடைமெழியில் அழைக்க
இதில் வேறு நாடார்.... தூ....வெட்கமாக இல்லை உங்களுக்கு.

Wednesday, September 11, 2019

முதலீட்டாளர்களுக்கு பணம் பெற்றுத்தர வைத்திருக்கும் திட்டம் என்ன ?

PACL போராட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.S.P.MANIKANDAN Sir அவர்களது உரை.


தமிழ்நாடு ஒருங்கிணைந்த PACL போராட்டகுழுவின் முதலீட்டாளர்களுக்கு பணம் பெற்றுத்தர வைத்திருக்கும் திட்டம் என்ன ?
குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.S.P.MANIKANDAN Sir அவர்களது உரை.

sebi website..
http://www.sebi.gov.in
nodalofficerpacl@sebi.gov.in
www.paclltd.com


sebi 92 page arikkai download..

https://www.google.com/url?q=https://www.sebi.gov.in/sebi_data/attachdocs/1408704987673.pdf&sa=U&ved=2ahUKEwi91oni3vHjAhVKwI8KHSJXAbMQFjAAegQIBBAB&usg=AOvVaw0Y6Yxq1sQomM_6C5ouc2VR

Monday, September 9, 2019

ஆலங்குளம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர்

ஆலங்குளம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர்பலி


அதிக CC திறன் உள்ள மோட்டார் சைக்கிள்களை கல்லூரியின் விழிம்பில் இருக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் பெற்றோர்களே வளரும் இளம் மொட்டு ஒன்று தளிரிலேயே கருகியது
😭

Sunday, September 8, 2019

பொடியனூர் விஜயவிநாயகர் சிலை தாமிரபரணி நதியில் சிறப்பாக விஜர்சனம் செய்யப்பட்டது

பொடியனூர் விஜயவிநாயகர் சிலை தாமிரபரணி நதியில் சிறப்பாக விஜர்சனம் செய்யப்பட்டது


Saturday, August 24, 2019

லோதா கமிட்டிக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

PACL Tamilnadu

லோதா கமிட்டிக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு


https://www.facebook.com/374213376470424/posts/395950484296713/
லோதா கமிட்டிக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் PACL சொத்துக்கள் விற்பனை செய்ய லோதா கமிட்டி ஆகஸ்ட் 19 ந்தேதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதன் காலவரையறை செப்டம்பர் 16/19
 யார் வேண்டுமானாலும் விற்பனையில் பங்கேற்கலாம் கீழ்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்,
லோதா கமிட்டிக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Teligram Group
https://t.me/joinchat/NV05qRQpiKehLzQoWyFEcQ

பேஸ்புக் பேஜ்
https://www.facebook.com/arumugasamygo/

ஃபேஸ்புக் லிங்
https://www.facebook.com/groups/1583228691922670/
அனைவரும் இணைந்துகொள்ளவும்
#pacltodaynews #pacllatrstnews #pacltamil #sebi

Thursday, August 8, 2019

PGF LTD நிறுவன சொத்துகளை பட்டியலிட்ட செபி

PGF LTD நிறுவன சொத்துகளை பட்டியலிட்ட செபி

பொது அறிவிப்பு துணை- பி.ஜி.எஃப் லிமிடெட் சொத்துக்களின் விஷயத்தில்,

 மாண்புமிகு உச்சநீதிமன்றம் சிவில் மேல்முறையீட்டு எண் 6572/2004 இல் எம் என தலைப்பிடப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்க இது பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.  / கள்.  பிஜிஎஃப் லிமிடெட் & ஆர்.  வி. யூனியன் ஆஃப் இந்தியா & அன்., இந்திய மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதிபதி விக்ரமாஜித் சென் மற்றும் மாண்புமிகு முன்னாள் நீதிபதி நீதிபதி ஆர்.வி. ஈஸ்வர் ஆகியோரின் தலைமையில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  பி.ஜி.எஃப் லிமிடெட் சொத்துக்களை அப்புறப்படுத்தியதற்காக டெல்லி உயர் நீதிமன்றம், இதன் மூலம் விற்பனை வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு (“கமிட்டி”) செலுத்த முடியும்.  சிபிஐ கைப்பற்றிய மற்றும் குழுவுக்கு கிடைக்கக்கூடிய பிஜிஎஃப் லிமிடெட் சொத்துக்கள் செபியின் வலைத்தளமான www.sebi.gov.in இல் பட்டியலிடப்பட்டுள்ளன.  

இந்த வகையில், 2015 ஏப்ரல் 1 தேதியிட்ட மேற்கண்ட ஆணைப்படி, பிஜிஎஃப் லிமிடெட் அல்லது பிஜிஎஃப் லிமிடெட் அல்லது அதன் கூட்டாளிகள் / துணை நிறுவனங்கள் ஏதேனும் வட்டி / உரிமை உள்ள சொத்துக்களை விற்க குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.  , நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ.  அதன்படி, பிஜிஎஃப் லிமிடெட் சொத்துக்களை விற்க எந்தவொரு தனிநபருக்கும் / நிறுவனத்திற்கும் குழு அங்கீகாரம் வழங்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிஜிஎஃப் லிமிடெட் சொத்துக்களை சட்டவிரோதமாகவும் அங்கீகாரமின்றி கையகப்படுத்தவும் தனிநபர்கள் / நிறுவனங்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் தேவையானதை அழைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  சட்டத்தின் கீழ் நடவடிக்கை.  மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, ​​பிஜிஎஃப் லிமிடெட் அல்லது பிஜிஎஃப் லிமிடெட் அல்லது அதன் கூட்டாளிகள் / துணை நிறுவனங்கள் எந்தவொரு வட்டி / உரிமையையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்கும் அல்லது கையாள்வதில் பொதுமக்கள் மீண்டும் எச்சரிக்கப்படுகிறார்கள்.  பிஜிஎஃப் லிமிடெட் விஷயத்தில் எந்தவொரு தகவலுக்கும், கமிட்டியால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புகள் மற்றும் செய்தி வெளியீடுகள் மட்டுமே, www.sebi.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.  டெல்லி ஆகஸ்ட் 07, 2019

Monday, August 5, 2019

pacl tamilnadu

Pacl திருநெல்வேலி 2 கோடி சொத்து வெறும் 17 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம்


Sunday, August 4, 2019

25/7/19 அன்று சென்னை செபி அலுவலகத்தில் PACL பணத்தை விரைவாக எளிமையாக வழங்கிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
 தமிழ்நாடு ஒருங்கிணைந்த PACL போராட்டக் குழுவின்
சார்பாக நடைபெற்றது செபியின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது
செபி 30/7/19 அன்றைய தேதியிட்டு ஒரு கடிதம் போராட்ட அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளது நமது பிரதிநிமிகளை சந்திக்க லோதாகமிட்டி சம்மதித்து உள்ளது மேலும் சில கோரிக்கைகளை ஏற்றுகொண்டு உள்ளது
இது நமது போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி









Sunday, July 28, 2019

பாத எரிச்சல் வலி குணமாக்கும் எளிய மருத்துவம்

https://youtu.be/Oe9_9XqFb8g
நம்மில் சில நபர்களுக்கு நாட்பட்ட கால் பாத எரிச்சல் மற்றும் வலி இருந்துகொண்டே இருக்கும் ஆங்கில தமிழ் மருத்துவம் எதிலும் குணமாகாத நிலையில் வலிநிவாரணிகளை பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் இதை ஒரு எழிய மருத்துவம் அல்லாத உணவின் மூலம் எளிதில் குணமாக்க,
 புறா வை வாங்கிவந்து அறுத்து அதன் இரத்தத்தை கால் மூட்டுக்கு கீழ் பாதம் அனைத்து பகுதிகளிலும் குளிர தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி விடலாம் புறாவின் கறியை சிக்கன் சமைப்பது போல் சமைத்து உண்ண வேண்டும் 2 நாட்களிலேயே வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

Monday, July 22, 2019

PACL vs SEBI Chennai Waiting struggle, PACL முதலீட்டாளர்கள் சென்னை SEBI அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

PACL vs SEBI Chennai Waiting struggle
PACL முதலீட்டாளர்கள் சென்னை SEBI அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு..,

PACL TAMILNADU

SEBI அமைப்பானது PACL நிறுவனத்தை 2014 ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி அதன் திட்டத்தை நிறுத்தி உடனடியாக முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டது.
அதன் பின் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை நியமித்து PACL கம்பெனியின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு 6 மாதங்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது.
இன்று வரை முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பியளிக்கவில்லை .
அனைத்து முதலீட்டாளர்களையும் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவிப்பு
கொடுத்தது SEBI ஆனால் அதில் சாத்தியமில்லாத பல நிபந்தனையும் கூடவே சேர்த்து கொடுத்தது அதனை எதிர்த்து பல அமைப்புகள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது ஆனாலும் இதெற்கெல்லாம் செபி அமைப்பானது செவி சாய்ப்பதாக தெரியவில்லை இதனை எதிர்த்தே ஒருங்கிணைந்த PACL போராட்டகுழுவின் சார்பில் முதலீட்டாளர்கள் பணத்தை உடனடியாக வழங்குமாறு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கபட்டுள்ளது வரும் 25/07/2019 அன்று காலை 10 மணிக்கு அந்த போராட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டுவரவேண்டிய பதாகைகள் டிசைன் இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது இலவசமாக Download செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
நன்றி!!!