connect

Monday, July 22, 2019

PACL vs SEBI Chennai Waiting struggle, PACL முதலீட்டாளர்கள் சென்னை SEBI அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

PACL vs SEBI Chennai Waiting struggle
PACL முதலீட்டாளர்கள் சென்னை SEBI அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு..,

PACL TAMILNADU

SEBI அமைப்பானது PACL நிறுவனத்தை 2014 ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி அதன் திட்டத்தை நிறுத்தி உடனடியாக முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டது.
அதன் பின் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை நியமித்து PACL கம்பெனியின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு 6 மாதங்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது.
இன்று வரை முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பியளிக்கவில்லை .
அனைத்து முதலீட்டாளர்களையும் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவிப்பு
கொடுத்தது SEBI ஆனால் அதில் சாத்தியமில்லாத பல நிபந்தனையும் கூடவே சேர்த்து கொடுத்தது அதனை எதிர்த்து பல அமைப்புகள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது ஆனாலும் இதெற்கெல்லாம் செபி அமைப்பானது செவி சாய்ப்பதாக தெரியவில்லை இதனை எதிர்த்தே ஒருங்கிணைந்த PACL போராட்டகுழுவின் சார்பில் முதலீட்டாளர்கள் பணத்தை உடனடியாக வழங்குமாறு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கபட்டுள்ளது வரும் 25/07/2019 அன்று காலை 10 மணிக்கு அந்த போராட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டுவரவேண்டிய பதாகைகள் டிசைன் இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது இலவசமாக Download செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
நன்றி!!!



















0 comments:

Post a Comment