connect

Saturday, September 21, 2019

PACL திருநெல்வேலி மாவட்ட லெட்சுமியூர் பண்ணை முறைகேடாக விற்பனை

பிஏசிஎல் நிலம் முறைகேடாக விற்பனை



டெல்லியை தலைமையிடமாக கொண்ட பிஏசிஎல் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன இவை அனைத்தும் பொது மக்களிடமிருந்து வசூல் செய்த டெபாசிட் பணத்தில் வாங்கிய இடங்களாகும் 2014 செபி கொடுத்த ஒரு உத்தரவினால் இந்நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து பொது மக்களின் டெபாசிட் பணத்தை திருப்பி அளிப்பதற்காக ஆனால் பொதுமக்களின் பணத்தை திருப்பி அளிக்க எந்த விதமான பெரிய முயற்சியும் எடுக்கப்படவில்லை பிஏசிஎல் நிறுவனமானது தன்னுடைய பேரிலும் தன்னுடைய துணை நிறுவனங்கள் பேரிலும் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்த நிர்வாகிகள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தற்போது நிறுவனம் முடக்கப்பட்டுள்ள காரணத்தால் நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்கள் தங்கள் பெயரில் இருந்த சொத்துக்களை தன்னிச்சையாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இதில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இந்நிறுவனம் பெயரில் உள்ளது அதில் ஒன்றுதான் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள லட்சுமியூர் விவசாய பண்ணை 101 ஏக்கர் நிலம் தற்போது இந்த இடமானது லோக்கல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் சிட்டிசன் ப்ளூ மெட்டல் என்ற கம்பெனிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது இடத்தை வாங்கிய நிறுவனம் தற்போது அந்த இடத்தை சுத்தம் செய்து காம்பவுண்டு அமைத்து வருகிறது பணம் போட்டு முதலீட்டாளர்கள் இதை கண்ணீருடன் பார்த்து வருகிறார்கள்.
அது பற்றிய வீடியோ இணைப்பு இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது

இதனை கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் தமிழக அரசும் உச்சநீதிமன்றமும் நினைத்தால் தற்போது இந்த பணிகளை நிறுத்த முடியும் செய்வார்களா ?? லோதா கமிட்டியின் உச்சநீதிமன்றமும் ??

0 comments:

Post a Comment