connect

Tuesday, September 24, 2019

செங்கோட்டையில் பிஏசிஎல் நிலம் விற்பனை அதிர்ச்சியான செய்தி

செங்கோட்டையில் பிஏசிஎல் நிலம் விற்பனை அதிர்ச்சியான செய்தி


டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிஏசிஎல் இந்தியா லிமிடெட் இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது.


தற்போது அந்த நிறுவனம் செபி என்ற அமைப்பால் முடக்கப்பட்டுள்ளது, 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றத்தால் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க சொத்துக்களை விற்பனை செய்ய அந்த குழு களத்தில் இறங்கியுள்ளது.


ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் நடக்கவில்லை இது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளது இந்த நிறுவனத்தில் முன்னர் வேலை செய்த பணியாளர்கள்&லோக்கல் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இணைந்து கூட்டணியாக இந்த நிலங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக தற்போது திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிறுவனத்திற்கு 0.43 ஏக்கர் நிலம் இருந்தது, இது இந்த பகுதியில் யாருக்குமே தெரியாது நில மோசடி கும்பல் எப்படியோ இதை மோப்பம் பிடித்து விட்டது தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த செங்கோட்டை இடமும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள திருவம்பலபுரம் என்ற இடத்தில் உள்ள பிஏசிஎல் இடமும் இணைந்து ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது இது பற்றிய ஒரு காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment