Wednesday, October 30, 2019
கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் பயங்கர தீ விபத்து
Wednesday, October 16, 2019
PACL சொத்துகளை பாதுகாக்க களம் இறங்கிய முதலீட்டாளர்கள் வழிகாட்டும் திருநெல்வேலி
நிலத்தை மீட்க களத்தில் இறங்கிய PACL முதலீட்டாளர்கள்
முறைகேடாக விற்பனை செய்யப்படும் PACL INDIA LTD COMPANY சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் தாலுகாவிற்க்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள 141 ஏக்கர் நிலம் முறைகேடாக உச்சநீதிமன்ற உத்தரவிற்க்கு விரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இதனை கேள்விப்பட்ட முதலீட்டாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்த சொத்தை அடையாளம் காட்டும் விதமாகவும் நில அபகரிப்பு செய்யும் கூட்டத்தினருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகவும் தமிழ் & ஆங்கிலத்தில் உத்தரவுகள் அடங்கிய போர்ட் ஒன்றை அந்த பண்ணை உட்புறம் நட்டு உள்ளனர்
இது போன்று அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு உறுதிபூண்டுள்ளனர் இதுபோல் அனைத்து சொத்துக்களையும் அந்த அந்த பகுதி மக்கள் பாதிகாக்கலாமே !!
Tuesday, October 15, 2019
கோவை பழனி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கம்
- கோவை பழனி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கம்
சேலம்-கரூர்
கோவை-பழனி
கோவை-பொள்ளாச்சி,
இடையே 3 புதிய ரயில்களின்சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் காணோலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதன்படி தமிழகத்தில் சேலம், கோவை, பொள்ளாச்சி நகரங்களில் இதற்கான விழா நடைபெற்றது.
புதிய ரயில்கள் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பயணிகளை மகிழ்சியடைய செய்துள்ளது
பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்
பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையானுர் கொண்டலூர் திப்பனம்பட்டி சென்னல் தா புதுக்குளம் தெற்குமடத்துக்குளம் இன்னும் சில குளங்கள் கடந்த பல வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது தற்போது குளங்கள் தமிழ்நாடு அரசால் தூர்வாரி நன்கு ஆளப்படுத்தப்பட்டு தண்ணீரை தேக்குவதற்க்கு வசதியாக காத்திருக்கின்றன இந்த வருடமாவது பருவ மழை சரியாக பெய்து குளங்கள் நிரம்புமா ?இப்பகுதி மக்கள் வானத்தைப் பார்த்து காத்திருக்கின்றார்கள்
Monday, October 14, 2019
தூத்துக்குடி - பெங்களூர் விமான சேவை
தூத்துக்குடி - பெங்களூர் இண்டிகோ விமான சேவை : 27 oct ம் தேதி தொடக்கம்.
தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை oct 27ம் தேதி தொடங்குகிறது.
கடந்த 2018 ம் வருடம் ஜூலை மாதம் spice jet நிறுவனத்தால் Tuticorin to bangalur பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது
தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது.
இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில்,
"பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும்.
ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக RS.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என்று தெரிவித்துள்ளது
தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை oct 27ம் தேதி தொடங்குகிறது.
கடந்த 2018 ம் வருடம் ஜூலை மாதம் spice jet நிறுவனத்தால் Tuticorin to bangalur பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது
தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது.
இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில்,
"பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும்.
ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக RS.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என்று தெரிவித்துள்ளது
Saturday, October 5, 2019
திருச்சி மீட்டிங்கில் நடந்தது பற்றிய விளக்கம்
Arumugasamy go October 05, 2019 paclrefund applylastdateintamil, paclrefundlastdatetamil, Paclsebi, paclTamil, pacltamilnadu, pacltoday, pacltoday paclTamil No comments
திருச்சி மீட்டிங்கில் நடந்தது பற்றிய விளக்கம்
கடந்த மாதம் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பிஎசிஎல் பிரதிநிதிகள் குழு மும்பையில் உள்ள செபி யின் தலைமை அலுவலகத்தில் கமிட்டி ஐ நேரில் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகள் சந்தேகங்கள் கோரிக்கை மனுக்களை கமிட்டியிடம் நேரில் சமர்ப்பித்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பவந்து உள்ளது.
அதில் கூறியுள்ள கருத்துக்களை அக்டோபர் 2ஆம் தேதி திருச்சியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைவருக்கும் அறிவித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழகத்திலிருந்து சென்ற 11 பேர் கொண்ட குழுவினர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக
பன்னீர்செல்வம், செல்வ முத்துக்குமரன், தினகரன், சுப்ரமணியன், ஆறுமுகச்சாமி, மணிகண்டன் ஆகியோர் பேசினார்கள்
இதில் முக்கியமாக கூறப்பட்ட கருத்து என்னவென்றால் இது வரையும் லோதா கமிட்டி சந்தித்து இவ்வளவு நேரம் யாரிடமும் பேசியது இல்லை முதல் முதலாக தமிழ்நாட்டின் PACL பிரதிநிதிகள் கமிட்டியை சந்தித்து தங்களுடைய பிரச்சனைகளை நேரில் தெரிவித்து கமிட்டிக்கு புரிய வைத்தனர் முக்கியமாக அக்னாலேஜ்மென்ட் பிரச்சனை, இறந்துபோன வாடிக்கையாளர்களுக்கு வாரிசுகள் பணத்தைப் பெறுவது, அனைத்து ரசீதுகள் கேட்கக்கூடாது, ஆன்லைனில் பதிவு செய்ததில் தவறுதலான பதிவுகளுக்கு தீர்வு போன்ற அனைத்து பிரச்சினைகளும் கமிட்டியினர் முன்வைக்கப்பட்டு அனைத்தையும் கமிட்டி பரிசீலனை செய்வதாக கூறி யுள்ளது. முக்கியமாக தமிழில் கமிட்டி நேரடியாக பொது அறிவிப்பு ஒன்றை பத்திரிக்கை வாயிலாக வெளியிடுவதாக கூறி உள்ளது மேலும் அக்டோபர் 10ம் தேதி ரூபாய் 5 ஆயிரம் வரை கட்டியுள்ள முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதற்கான நடவடிக்கை தொடங்கும் என்ற தகவலையும் கூறியுள்ளது.
இதுபோன்ற அனைத்து தகவல்களும் திருச்சி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக அனைவரும் உறுதி கூறினார்கள் முடிவில் ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூற கருத்தரங்கு நிறைவு பெற்றது


















